அமெரிக்கா || திடீரென ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர் - 4 பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா|| திடீரென ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர் - 4 பயணிகளின் கதி என்ன?

அமெரிக்கா நாட்டில் உள்ள அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் இன்று நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இதையடுத்து இந்த ஹெலிகாப்டர் அலாஸ்கா ஏரிப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஏரிக்குள் மூழிகிய நான்கு பேரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டரில் வேறு யாரேனும் பயணித்தார்களா? இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் ஏரிக்குள் விழுந்து நன்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died helicoptar drowned lake in america


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->