தேர்தலின்போது மதகலவரத்தை தூண்டுவதே பாஜகவின் வேலை - மம்தா பேனர்ஜி குற்றசாட்டு!!
election religion issue bjp standard
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவுக்கு பிறகு பாஜக தோல்வி அடைவது உறுதியாகி விட்டது.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. எப்பொழுது தேர்தல் நடத்தாலும் மத பிரிவினை ஏற்படுத்தி மத மொதலை உருவாக்குவது பாஜக வேலை. பொது சிவில் சட்டத்தை இஸ்லாம் மதத்துக்கு எதிரான பிரச்சாரமாக பாஜக பயன்படுத்துகிறது. இந்த பொதுசிவில் சட்டத்தால் ஹிந்துக்களுக்கு எந்த பயனுமில்லை இன்று பேசினார்.
English Summary
election religion issue bjp standard