உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலநடுக்கங்கள்.. இன்று பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 41,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஓய்வதற்குள் உலகம் முழுவதும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் நேற்று நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மத்திய பிலிப்பைன்ஸில் அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணிக்கு முக்கிய தீவான மாஸ்பேட்டில், உசன் நகராட்சியில், அருகிலுள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Philippines 6.1 rictor measurement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->