கிரீஸ் நாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake in Greece
கிரீஸ் நாட்டில் வடகிழக்கு பகுதியான கிரீட் பகுதியில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிரேக்கத்தில் உள்ள சிட்டியாவிற்கு வடகிழக்கே 60(37 மைல்) கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 1.25 மணியளவில் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது 80 கிலோமீட்டர் ஆழத்திலும், 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சம் ஏற்பட்டு கடலோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனே காலி செய்து விட்டு உயரமான இடங்களுக்கு செல்லுமாறு கண்காணிப்பு முகவர்கள் ஆலோசனையை வெளியிட்டனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.