5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!
earthquake in china
சீனா நாட்டின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு 10.55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் சீனாவின் யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.