ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை கைது.! நாடு முழுதும் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


பிரபல ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டிற்கு எதிராக ஹிஜாப் விவகாரத்தில் குரல் கொடுப்பவர்களுக்கும், அந்நாட்டு அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களுக்கும் அந்நாடு கடுமையான தண்டனைகளை கொடுத்து வருகிறது.

இப்படி எதிர்ப்பவர்களை கொலை செய்வது மற்றும் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈரானிய அரசு ஈடுபட்டு வருகின்றது. ஈரானிய நடிகையான தரானே அலி தூஸ்தி என்பவர் அந்நாட்டு அரசின் இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

அத்துடன் அவர் சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஈரான் காவல்துறையினர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர். மேலும் அவரை கைதும் செய்துள்ளனர். நடிகை அலிதூஸ்தி நடித்துள்ள தி சேல்ஸ்மேன் என்ற திரைப்படமானது ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharane ali Doosdhi arrested By Iran police


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->