துருக்கி-சிரியா நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 7,726ஆக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,726ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காசியான்டெப் நகரில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 

இதில் துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களும், சிரியாவின், அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து துருக்கியில் 7.5 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,726ஆக உயர்ந்துள்ளது. இதில் துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 1,832 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises to 7726 in turkey sriya earthquake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->