குஜராத்தில் அதிர்ச்சி : தங்களது தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதியினர்.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அதிர்ச்சி : தங்களது தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதியினர்.!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் விஞ்சியா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹெமுபாய் மக்வானா-ஹன்சாபென் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் ஒரு வீட்டிலும், அவர்களது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டிலும் வசித்து வந்தனர். 

இதையடுத்து கணவன் மனைவி இருவரும் தான் தங்கியிருந்த வீட்டில் கடந்த ஓராண்டாக பூஜை செய்து வந்த நிலையில் நேற்று இருவரும் தலை துண்டிக்கப்பட்டு வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தம்பதியர் இருவரும் பிரத்யேக எந்திரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்களது தலையை தாங்களே வெட்டி அக்னி குண்டத்தில் விழுமாறு நரபலி கொடுத்துக் கொண்டது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்ததில், தம்பதியர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியது. தம்பதியினர் தங்களது தலையை வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple self sucide immolation cutting off head in gujarat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->