நீடிக்கும் போர் பதற்றம்!...ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் நியமனம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா  இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். தொடர்ந்து நஸ்ரல்லாவின் உறவினர் ஹஷேம் சபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஹஷேம் சபிதீன் மற்றும் ஹிஸ்புல்லா புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் அலி ஹுசைன் ஹசிமா ஆகியோர் ஹிஸ்புல்லா தளபதிகளுடன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவராக இருந்த நயிம் குவாசம் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும், நயிம் குவாசம் ஹிஸ்புல்லாவின் தலைவராக நீண்ட நாட்கள் நீடிக்கமாட்டார் என்றும், இது தற்காலிக நியமனம் என்று இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Continued war tensionew leader of hizbullah organization appointed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->