பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! - Seithipunal
Seithipunal


சீனா, ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய சீனா, ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் இங்காய் தொடக்கப்பள்ளியின் விடுதியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China school hostel fire accident 13 death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->