சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 15 பேர் பலி.!
China landslide death toll rises to 15
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணத்துக்கு உட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. இதையடுத்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உள்ள 11 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சீனாவில் உள்ள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும். மேலும் மாயமானவர்களை தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது மீட்புக் குழுவினர் என்று கூறியுள்ளனர்.
English Summary
China landslide death toll rises to 15