ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்... பகீர் தகவலை வெளியிட்ட சீனா... நிறுவனத்திற்கு சீல்.!
China Ice Cream Test Confirms Corona Virus
சீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் யூகான் நகரில், கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் வவ்வால் மற்றும் பாம்பினால் உருவாகியதாக பல தகவல் வெளியானது.
இந்த வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சார்ந்த விஞ்ஞானிகள் சீனாவிற்கு சென்றுள்ளனர். மனிதரிடம் இருந்து மனிதரிடம் பரவும் கொரோனா வைரஸ் சிங்கம், புலி போன்ற விலங்கினத்திற்கும் பரவியது உறுதி செய்தது.
மேலும், சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சீனாவில் உள்ள டியான்ஜின் மாநகராட்சியில் செய்யப்பட்டு வரும் ஐஸ்க்ரீம் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
China Ice Cream Test Confirms Corona Virus