பாகிஸ்தான்.! பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணம் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது 1,572 மீட்டர் உயரத்தில் உள்ள கில்லா சைஃபுல்லாவுக்கு அருகில் உள்ள அக்தர்சாய் என்ற மலைப்பகுதியின் ஒரு வளைவில் பேருந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஒரு சிறுவன் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus accident in Pakistan


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->