பிலிப்பைன்ஸ் || நடுக்கடலில் சென்ற பயணிகள் படகில் பெரும் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் சென்ற பயணிகள் படகில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே மிண்டோரோ தீவில் கலபன் துறைமுகத்திலிருந்து படங்காஸ் சென்று கொண்டிருந்த படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக திடீரென தீ பற்றியது. தீயானது கொழுந்து விட்டு எரிந்து படகு முழுவதும் பரவியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் படகில் பயணித்த 82 பேரில் 73 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இரண்டு கடலோரக் காவல்படை மற்றும் மீட்பு கப்பல்கள் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boat fire in Phillipines


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->