விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்: 3 ஊழியர்கள் பரிதாப பலி!
Air Ambulance Helicopter Crashed 3 Employees Killed
அமெரிக்கா, ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் இருந்தது.
இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் வெதர் போர்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு நோயாளி சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டர் தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீது குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Air Ambulance Helicopter Crashed 3 Employees Killed