அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து.! 17 பேர் உயிரிழப்பு.!
A boat carrying refugees capsized
அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த உள்ளனர்.
ஹைதி நாட்டில் ஏற்பட்ட வறுமையும், வன்முறையால் ஏராளமானோர் அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடற் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதிலிருந்து அகதிகளாக 60 பேர் வரை படகில் அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது நியூ பிராவிடன்ஸ் தீவிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில், படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், 25 பேரை உயிருடனும், 17 பேரை சடலமாகவும் மீட்டு உள்ளனர்.
மேலும் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
A boat carrying refugees capsized