பெருவில் நடந்த தொல்லியல் ஆய்வு... 800 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டெடுப்பு..! - Seithipunal
Seithipunal


800 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட மனித உடலை தொல்லியல் துறை கண்டறிந்தனர்.

மனிதம் ஆதி காலத்தில் எப்படி வாழ்ந்தான் என்பதை அறிய அகழாய்வை மேற்கொள்ளுவது நீண்ட காலமாக நடந்து  வருகிறது. இந்நிலையில், பெரு நாட்டில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் இருந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் லிமா பிராந்தியத்தில் கஜமர்குயில்லா பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலின் அருகில் பானை, சிறிய வடிவிலான குடுவை மற்றும் உணவு தானியங்கள் போன்றவையும் வைக்கப்பட்டன. சக்லா பகுதியில் வாழ்ந்த  ஆதி காலமனிதனின் உடலாக அது இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெர்வித்துள்ளனர்.

இந்த உடல் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் சடலமாக இருக்கலாம் என தெரிவித்தனர். சரியான ஆண்டை கண்டறிய கார்பன் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

800 year old mummy found in peru


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->