நியூசிலாந்தில் 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


தென்பசுபிக் நாடான நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடமான லோஃபர்ஸ் லாட்ஜ், தங்கும் விடுதியில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கட்டிடத்திலுள்ள பெரும்பாலானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுமார் 92 அறைகளை கொண்ட லோஃபர்ஸ் விடுதியின் மேற்கூரை இந்த தீ விபத்தினால் இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அருகில் உள்ள கட்டிடங்களிருந்து மக்களை வெளியேற்றி வருவதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed in Fire accident in 4 storey building in new Zealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->