துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
5 died as boat capsized in tunisia
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் துனிசியாவிலிருந்து மத்திய தரை கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி அகதிகளுடன் சென்று கொண்டிருந்த விசைப்படகு ஸ்பாக்ஸ் மாகாணம் அருகே விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 20 அகதிகளை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் 5 ஆப்பிரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக மக்களை படகில் ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் கவிழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
5 died as boat capsized in tunisia