ஈக்வடார் || நடுக்கடலில் சுற்றுலா படகு கவிழ்த்து விபத்து.! 4 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான ஈகுவடாரில் பிரபல சுற்றுலா தலமான கலாபகோஸ் தீவுக்கு சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், கொலம்பியா, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 37 பேர் படகில் பயணித்த நிலையில் எரிபொருள் தீர்ந்ததால் நடுக்கடலில் படகு நின்றது.

இதையடுத்து ஊழியர்கள் படகை செயல்பட வைக்க முயன்ற பொழுது நிலை தடுமாறி படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த 2 பேர், கொலம்பிய மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 31 பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 died in boat capsized in Ecuador


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->