ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் மீட்பு!
3 Indians missing in Iran rescued
ஈரானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர்.அப்போது அங்குள்ள உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது வேலை வழங்கியது.
இந்த நிலையில் ஈரானுக்கு வந்த 3 பேரும் திடீரென காணாமல் போனார்கள். இதையடுத்து காணாமல் போனவர்களை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மே 1 ஆம் தேதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
English Summary
3 Indians missing in Iran rescued