நடுவானில் மோதிய 2 இத்தாலிய விமானப்படை விமானங்கள் - 2 விமானிகள் பலி - Seithipunal
Seithipunal


இரண்டு இத்தாலிய விமானப்படை விமானங்கள் பயிற்சியின்போது நடுவானில் மோதிய விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் விமான படையின் இரண்டு U-208 விமானங்கள் ரோமில் இருந்து வடகிழக்கில் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் அமைந்துள்ள கைடோனியா இராணுவ விமான நிலையத்திற்கு அருகே நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்பொழுது திடீரென நடுவானில் இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானங்களில் ஒன்று வயலியிலும், மற்றொன்று நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து நொறுங்கிய நிலையில், விமானத்தில் இருந்து இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் தரையில் இருந்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Pilots killed as two Italian air force planes crash mid air


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->