தாய்லாந்து || ராணுவ கல்லூரியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பலி.!
2 died shooting in Thailand army college
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ராயல் தாய் ராணுவப் போர்க் கல்லூரியில் எழுத்தாளராக பணியாற்றி வந்த சார்ஜென்ட் மேஜர் யோங்யுத் முங்கோர்ன்கிம், திடீரென்று சக வீரர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ராணுவ வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்ததாக காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் தப்பியோடிய நிலையில், சிறிது நேரத்துக்கு பிறகு தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். அதன்பின் அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கிச்சூட்டின் காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இறந்த வீரர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இராணுவம் இரங்கல் தெரிவிக்கிறது எனவும், இந்த சம்பவம் இரு குடும்பங்களுக்கும், ராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என்றும் தாய்லாந்து துணை இராணுவப் பேச்சாளர் சிரேஷ்ட கேணல் சிறிச்சான்ங்கா தெரிவித்துள்ளார்.
English Summary
2 died shooting in Thailand army college