சீனா || உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட கிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணம் சாங்சுன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயானது மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. 

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர், விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 killed in restaurant fire in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->