பாகிஸ்தான் || வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.! 13 பேர் பலி
13 died as boat capsized in Pakistan
பருவநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக பருவமழை சராசரி அளவை காட்டிலும் அதிகளவு பதிவாகி, சிந்து, கிழக்கு பஞ்சாப், பலுசிஸ்தான், சுக்கூர், சிந்தி உள்ளிட்ட 13 மாகனங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் செவ்ஹான் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
13 died as boat capsized in Pakistan