ஒரு புறம் போரின் கொடூரம், மறுபுறம் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: நிலைகுலைந்துள்ள ஈரான்..! - Seithipunal
Seithipunal


 ஈரான் - இஸ்ரேல் நாடுகள் இடையே கடந்த ஒன்பது நாட்களாக போர் நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓய்ந்தபாடில்லை. இருநாடுகளும் மாறி மாறி தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பீதியை கிளப்பியுள்ளது.

குறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஈரானில் டெஹ்ரான் அருகில் உள்ள அணுமின் நிலையத்துக்கு அருகே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து,செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் மறுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளதாகவும், சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்நிலையில், குறித்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 powerful earthquakes near the nuclear power plant in Iran


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->