வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.

இந்தநிலையில், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி யில் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்கள் குமரி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழையும், கும்பகோணம் நல்லினம் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், குடவாசல், ஆலங்குடி, செய்யூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம், கொன்னூர், சென்னை தாம்பரத்தில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report on december 04


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->