அதிதீவிர புயலாக வலுப்பெற்றது "பிபோர்ஜாய்"...! சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜாய் புயல் காரணமாக சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "மிக தீவிர புயல் பிபோர்ஜாய்", வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது சௌராஷ்டிரா - கட்ச் வடக்கு வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15ஆம் தேதி அன்று மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும். இதனால் சௌராஷ்டிரா - கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12-15 வரை மத்திய அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் மற்றும் ஜூன் 15 வரை சவுராஷ்டிரா-கட்ச் கடற்கரைக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warning for Saurashtra Kutch coast for biborjoi cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->