தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. புரட்டி எடுக்க போகும் மிக கனமழை.!!
today 4 districts red alert
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
today 4 districts red alert