வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று முதல் 25-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
TN Rain Northeast Monsoon
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (நவம்பர் 22, சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது.
இந்த வானிலை நிகழ்வுகளால், தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும்.
இன்று (நவ. 21) கனமழை பெய்யும் பகுதிகள்
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், குறிப்பாக 10 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது:
தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகள்.
நவ. 22 மற்றும் 23 (சனி & ஞாயிறு)
நாளை மற்றும் நாளை மறுதினமும் (நவ. 23) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களின் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். மேலும், பின்வரும் மாவட்டங்களில் கனமழை தொடரும்:
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகள்.
நவ. 24 (திங்கட்கிழமை)
தாழ்வு மண்டலம் வலுப்பெறும் தினமான நவம்பர் 24-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். பின்வரும் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகள்.
English Summary
TN Rain Northeast Monsoon