மூன்று மாவட்டங்களில் மழை - வானிலை மையம் தகவல்.!
three district rain in tamilnadu
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் காலை 10 மணி வரை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
three district rain in tamilnadu