தமிழகத்தில் மழை..மக்கள் மகிழ்ச்சி.!!
tamilnadu rain people happy
தமிழ்நாட்டில் ஏப்ரல் 7 இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடத்த ஒருமாத காலமாகவே நாட்டின் பலப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், சென்னை போன்ற பகுதிகளில் வெயில் 100 % டிகிரியை தாண்டி இருந்தது.
வெயிலின் தாக்கத்தை குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களும் மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் பரவிவந்தது. இதற்கு, காரணம் காலநிலை மாற்றம்தான். இந்நிலை நீடித்தால் கூடியவிரைவில் உலகம் அழிய வாய்ப்புள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள தகவல் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கும் தகவல். வடதமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
English Summary
tamilnadu rain people happy