இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் .! சென்னை ஆய்வு மையத்தின் அலெர்ட்.!
september 13 weather report
வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் சென்னை உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது.
இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மதுரை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
september 13 weather report