நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சுற்றுலா தளங்கள் மூடல்..!
Red alert for Nilgiris district schools closed tomorrow
நீலகிரி மாவட்டத்தில் நாளை (05.08.2025) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
அதி கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து நாளை ஒருநாள் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி, 0423- 2450034, 2450035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 94887 00588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்புகளை தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Red alert for Nilgiris district schools closed tomorrow