101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை.. தண்ணீரில் தவிக்கும் மாவட்டம்.!!
Rain full in nilgiri
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி அணை, பில்லூர் அணை நிரம்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 101 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
அவலாஞ்சி, கெத்தை, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இதனால் பாதுகாப்பு கருத்தி கொண்டு, இந்த அணைகளின் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய கைவிடப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.