தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 20 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->