சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட குளிர்ச்சியான செய்தி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மழை.!!
may 11 weather report
தமிழகத்தில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெயில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
இந்நிலையில் வெப்பச்சலனம காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.