விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. சென்னை வானிலை மையம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளில் இருந்து இன்று விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 20.1.2021 மற்றும் 21.1.2021 தேதிகளில் இலங்கை கிழக்கே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 19 weather report in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->