பலத்த காற்று.. இடி மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

டெல்லியில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இதமான சூழ்நிலை நிலவுகிறது. இரவு இடி மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்று வீசியது. கண்டோன்மெண்ட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. 

மேலும், மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையிலும் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களை தொடர்பு கொண்டு நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில விமானங்கள் அண்டை நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain orange warning to delhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->