புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.!! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. இதன் பின்னர் நிவர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கர்நாடகத்தை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 29-ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தெற்கு திசையை நோக்கியே நகர்ந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heavy rain on nov 29


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->