இன்று கனமழை பெய்யும்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
heavy rain in tn 8 districts
தமிழகத்தில், வேலூா், நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
"மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில், ஆந்திரத்தை நோக்கி நகரக் கூடும்.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில், செப்.14,15 ஆகிய நாள்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், செப்.14 கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
heavy rain in tn 8 districts