இடி, மின்னலுடன் கூடிய கனமழை.! 10 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை.!
heavy rain for 10 district in tamilnadu
இன்றும், நாளையும் தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யகைகூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட பத்து மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யகூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யகைகூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகருடைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
English Summary
heavy rain for 10 district in tamilnadu