மக்களே உஷார்.! இனி வெப்பம் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!
Heat will increase in Tamil Nadu and puducherry
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heat will increase in Tamil Nadu and puducherry