தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகும் பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் தகவல்!!
dec 12 weather report
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாத தொடங்கத்தில் பருவமழை குறைந்தது. இதனை தொடர்ந்து நவம்பர் மாத இறுதியில் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படுகிறது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.