தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
dec 09 weather report
தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலைகொண்டுள்ளது.
இதனால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை செய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நாளை இடியுடன் கனமழை செய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.