வங்கக்கடலில் உருவானது சிட்ரங் புயல்!
Citrang storm formed in the Bay of Bengal
இந்திய வானிலை மையத்தால் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான புயலுக்கு தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட சிட்ரங் என்ற பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுத்து சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மத்திய மேற்கு வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி மத்திய வங்க கடலில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் சிட்ரங் என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
English Summary
Citrang storm formed in the Bay of Bengal