சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
26 nov rain in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வார இறுதியில் மழையின் தாக்கம் குறைந்து நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால், பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.