தமிழகத்தில் இன்று மழை பெய்யும் 11 மாவட்டங்கள்; கனமழை வாய்ப்புள்ள மாவட்டம்..?
11 districts in Tamil Nadu to receive heavy rain today
தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட, 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் அவினாசியில், 09 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும், சேலம் மாவட்டம் மேட்டூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையத்தில், தலா, 08 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும், 18 வரை மிதமான மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
English Summary
11 districts in Tamil Nadu to receive heavy rain today