மக்களே உஷார்: இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 02 மாவட்டங்கள்; நாளை கனமழை பெய்யும் 04 மாவட்டங்கள்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று 04 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக கடந்த 02 நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

அத்துடன், அங்கு போக்குவரத்துக்கு கட்டுப்பாடுககளை விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.  மேலும், தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

02 districts on red alert today 04 districts to receive heavy rain tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->