திருமணத்தில் டிக்டாக்..! சில்மிஷத்தால்... கடுப்பான மாப்பிள்ளை.. விபரீதம்.!
VIRAL VIDEO IN SOCIAL MEDIA
திருமண மேடையில் நடக்கும் சம்பவங்கள் சில நேரங்களில் வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியாகி வைரலாகிவிடும். மேடையில் இருந்து தவறி விழும் பொழுது மாப்பிளை, மணப்பெண்ணை தூக்கும்போது தவறி கீழே வீழ்ந்து போவது, திருமண நேரத்தில் அக்கினியை சுற்றிவரும்போது வேஷ்டி அவிழ்ந்து விழுவது என்று பல் விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாக்குவது வழக்கம்.
மேலும், தற்போது பல திருமணங்களில் டிக்ட்டோக் வீடியோ எடுப்பது எதோ சடங்காது, சம்பிரதாயம் போல மாறிவிட்டது. இந்த டிக்ட்டோக் வீடியோ மகிழ்சியை கொடுத்தாலும், சில நேரங்களில் விபரீதத்தில் தான் முடிகின்றது.
அதுபோல ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. வடமாநிலம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் மற்றும் மாப்பிளை இருவரும் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மாப்பிள்ளையின் பின்னால், இருக்கும் சொந்தக்காரர் ஒருவர் மாப்பிளையை சீண்டும் விதமாக தொடர்ந்து அவரிடம் சில்மிஷல் செய்து கொண்டே இருக்கின்றார்.
ஆரம்பத்தில் சீண்டும்போது சிறிது கொண்டு ஜாலியாக எடுத்து கொள்ளும், மாப்பிளை ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து மாலையை பிய்த்து போட்டு உறவினர் மீது பாய்ந்து சரமாரியாக அடிக்க துவங்குகிறார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
VIRAL VIDEO IN SOCIAL MEDIA